திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்

91 0

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 2023 ம் ஆண்டுக்கான பாதீடு இன்று (24) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தலைவர் நா.இராஜநாயகம் தலைமையில் காலை 10.00 மணியளவில் கூடிய போது சபைக்கு 23 உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தார்கள். ஒருவர் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.

இந்த நிலையில் சபை உறுப்பினர்களின் பாதீடு தொடர்பான உரைகளை தொடர்ந்து மொத்த பெறுகை ரூபா 350,741,460 முன்னுாற்றி ஐம்பது மில்லியன் ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு இலட்சத்து நானுற்றி அறுபது ரூபாய்) மதிப்புள்ள  பாதீடு எவ்வித எதிர்ப்புமின்றி ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.