தலைவர் பதவியை மஹிந்தவுக்கு வழங்குவது குறித்த மனு 13ம் திகதி விசாரணை

244 0

 சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 13ம் திகதி இந்த வழக்கை விசாரிக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அன்றைய தினத்திற்கு முன்னர் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்குமாறு, பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளதாக, எமது செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.