தலாவ – நபட வெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலின் போது படுகாயமடைந்த நிலையில், குறித்த 17 வயது வாலிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தலாவ பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.