வாடகைக்கு வாகனத்தை பெற்று தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

267 0

வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட காருடன் தலைமறைவான நபர் புறக்கோட்டை – ரஜமாவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொள்ளுப்பிட்டி பகுதியில் இருந்தே, குறித்த நபர் அந்த வாகனத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து வாகன உரிமையாளர் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி கொள்ளுப்பிடிய பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.மேலும் சந்தேகநபர் மிரிஹான – புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவராகும். இவரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.