பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில்

291 0

பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.

குறித்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மெகொட களுகமுவ பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு கொண்டுச் செல்லப்பட்டு பகிடிவதை புரியப்பட்டுள்ளதாக பேராதனை காவல்நிலையத்தில் நேற்று இரவு முறையிடப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேரையும் அதிகாலை 2.15 அளவில் கைது செய்தனர்.

இதனிடையே, பகிடிவதைக்கு உள்ளன முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் தற்போது பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.