நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, தெற்கு, மத்திய மாகாணங்களில் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் எனவும் நிலையம் அறிவித்துள்ளது.
அதேபோன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனூஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.