யாழ். அச்செழு பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

57 0

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (20) காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா, 7 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நீண்டநாள் கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.