கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது

230 0

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரநாயக்கவில் மண்சரிவால் பாதிக்கப்பட்டோருள் 20 குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று அப்பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது மக்களுக்கு வீடுகளை கையளித்ததன் பின்னர் கருத்து வெளியிட்டபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை 2026 ஆம் ஆண்டுவரை செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்தக் கடனை செலுத்திக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யும் சவாலுக்கு முகங்கொடுப்பதற்காக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.