பேருவளையிலிருந்து சென்ற படகு மூழ்கி 10 பேர் பலி

245 0

பேருவளையிலிருந்து களுத்தரை வரை சமய நிகழ்வொன்றுக்காக சென்றுகொண்டிருந்த படகொன்று கடலில் மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும் குழந்தையொன்றும் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.