வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபரி ஒருவர் கைது

55 0

மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள அரபாத்நகரில் உள்ள போதை பொருள் வியாபரி ஒருவரின் வீடு ஒன்றை 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கு 5 கிராம் 300 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளுடன் 41 வயதுடைய போதை பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு குறித்த போதை பொருள் வியாபரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன் போது போதை பொருள் வியாபாரத்தில் ஈடபட்டுக் கொண்டிருந்த வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 5 கிராம் 300 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.