யாழில் வாள்வெட்டு : ஒருவர் காயம்

69 0

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபாற்பெட்டி சந்திப் பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (நவ 10) பகல் 1.30 மணியளவில் நடந்துள்ளது.

இனந்தெரியாத கும்பலொன்று நபரை தாக்கிவிட்டு, உடனே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்த நபர் அங்கிருந்த சிலரால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், வாள்வெட்டு தாக்குதலுக்கு உட்பட்டு காயமடைந்துள்ள நபர் அரியாலை பகுதியைச் சேர்ந்த தர்மரத்தினம் கணேஸ்வரன் (வயது 42) என்பவர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.