தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவது பிரச்சினை – ஜே.வி.பி எச்சரிக்கை

250 0

எல்லை மீள் நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை, திகதி குறிப்பிடாது காலம் தாழ்த்துவது பிரச்சனைக்கு உரிய விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜே.வி.பி. இன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடுவது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்ற போதிலும், அவ்வாறு காலம் தாழ்த்துவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.