இலங்கை வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை நல்லாட்சி அரசாங்கத்தில் குறைவடைந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த அரசாங்கம் காலத்தில், வெளிநாட்டு சுற்றலா பயணிகள் மூலம் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டன.
எனினும் இந்த தொகை தற்சமயம் 5.4 பில்லியனாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்தப்பில் வைத்து கருத்து தெரிவித்த அவர் இந்த வீழ்ச்சியானது பாரதூரமானது எனவும் குறிப்பிட்டார்.