கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

354 0

Untitledகிளிநொச்சி – வட்டக்கச்சி – புதுக்காடு பகுதியில் சிறுவன் ஒருவன், கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் 5 வயதுடையவர் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளார்.

சிறுவனை தேடும் பணியில் பெற்றோரும் காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து சிறுவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.