அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் – ஜே.வி.பி

288 0

மலபோ தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினையில், அரசாங்கம் பொதுமக்களில் கருத்துக்கு செவி சாய்க்காது தான்தோன்றித்தனமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜே.வி.பி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கம்புருப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கம் என்று கூறிக்கொண்டாலும், அதற்கு எதிராகவே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.