உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.
இந்த குழுவை நியமித்து அதிவிசேட வர்த்தமானி ஒன்றையும் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இந்த குழுவின் தலைவராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

