இலங்கையர்களுக்கு நிதி உதவி திட்டம் – அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

234 0
இலங்கையர்களுக்கு நிதி உதவி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார பிரிவு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இலங்கை பெறுமதியில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகும்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் குடியியல் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், கலாசார நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் ஆகியோர் இந்த உதவியினை பெறுவதற்கு உரித்துடையவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணகத்தை ஊக்குவித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை ஊக்குவித்தல், கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்தல் முதலான இலக்குகளை அடைவதற்காக இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.