அரசியல் பழிவாங்கல்களுக்கு மக்கள் உரிய தருணத்தில் பதில் வழங்குவார்கள் – கோட்டாபய

250 0
அரசியல் பழிவாங்கல்களுக்கு மக்கள் உரிய தருணத்தில் பதில் வழங்குவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக நேற்று காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சந்தஹிருசேய புனித தளத்தில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது இடம்பெற்ற மோசடி தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டது.
மிக் ரக விமான கொள்வனவு தொடர்பான மோசடி தொடர்பிலும், அவன் கார்ட் நிறுவனம் தொடர்பில் தம்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தகைய செயற்பாடுகள் தமக்கு அநீதி இழைக்கப்படும் வகையில் அமைவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.