சம்பந்தன் மீது த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

245 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீர்குலைவதற்கான காரண கர்த்தாவாக இருக்கும் நிலையை அதன் தலைவர் இரா. சம்பந்தன் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.