லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மேலும் குறைக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் இன்று (24) தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலைச்சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி விலை திருத்தம் இடம்பெறும் எனவும், அதன்படி நவம்பர் மாதமும் அதே திகதியில் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லிட்ரோ காஸ் நிறுவனம் திறைசேரிக்கு கடந்த செப்டம்பரில் 6.5 பில்லியனை செலுத்தியதுடன் ஒக்டோபரில் 7.5 பில்லியளை மீளச் செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

