இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த கிரிக்கட் போட்டிகள் – ரணில் ஆலோசனை

320 0

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிரிக்கட் போட்டிகளை பயன்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பென்பராவில் நடைபெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான பயற்சி போட்டிக்கு முன்னரான விருந்து நிகழ்வில் வைத்து இதனை பிரதமர் கூறியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவுஸதிரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல், அவுஸ்திரேலிய வரலாற்றில் பிரதமரது கிரிக்கட் அணி விளையாடும் முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி, இலங்கைக்கு எதிராக அமைந்துள்ளது.

இது இலங்கையுடனான ராஜதந்திர உறவுக்கு அவுஸ்திரேலியா வழங்கும் முன்னுரிமையை எடுத்துக் காட்டுவதாக கூறியுள்ளார்.