இரண்டு வாரங்களில் புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை வர்த்தமானியில்?

239 0

எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதியில் புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று நம்புவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் இதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் தலைவர் அசோக்க பீரிஷினால் கையளிக்கப்பட்டது.

இதன்படி குறித்த அறிக்கை விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறி இருந்தார்.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுள் இந்த அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்பட அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.