80 தொன் கொள்ளளவுடைய இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

157 0

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 80 தொன் கொள்ளவு கொண்ட இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் தற்போது சிறந்த நிலையில் தொழிற்படும் 7 இழுவைக் கப்பல்கள் இருப்பதுடன், எதிர்காலத் தொழிற்பாடுகளுக்காக 80 தொன் கொள்ளளவு கொண்ட மேலுமொரு இழுவைக் கப்பல் கொள்வனவு செய்யப்பட வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் செயன்முறையைக் கடைப்பிடித்து இழுவைக் கப்பலை கொள்வனவு செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.