முதலாவது பிணை முறிவழக்கு – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட பத்துபேர் விடுவிப்பு

75 0

முதலாவதுதிறைசேரி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உட்பட பத்து பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிணைமுறி மோசடி வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உட்பட பத்துபேருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த  பொதுச்சொத்துகள் சட்டத்தின் அடிப்படையிலானகுற்றச்சாட்டுகளை முன்கொண்டு செல்ல முடியாது என தீர்மானித்துள்ள மூவரடங்கிய கொழும்பு விசேட நீதிமன்றம் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை தீர்ப்பின் பிரகாரம் நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.