ஸ்ற்காட் தமிழாலயத்தில் புதிய மாணவர்கள் மழலையர்நிலை இணைவு நிகழ்வு.

350 0

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான ஸ்ருற்காட் தமிழாலயத்தில் 08.10.2022 அன்று புதிய மாணவர் மழலையர்நிலை இணைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. உணர்வாலும் மொழியாலும் இணைந்த சிறார்களை மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில், ஆசிரியர்கள் இனிப்புப் பொதிகளை வழங்கி வரவேற்றுக் கொண்டனர். இருபது மாணவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் உடல் நலக் குறைவு காரணமாகப் பதினைந்து மாணவர்களே வருகை தந்திருந்தனர். சென்ற கல்வியாண்டில் இணைந்த சிறார்கள் புதியவர்களை வரவேற்கும் வண்ணம் பாடல்கள் பாடி மகிழ்வித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.