7 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

95 0

2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுக்குள் 700 000 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த  ஆண்டு ஒட்டுமொத்தமாகவே 3 இலட்சம் கடவுச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனினும் இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் 700 733 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 409 919 ஆண்களுக்கும் 290 814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அதிகளவு எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.