மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் கொறோனா விசக்கிரிமிகளின் தாக்கத்தின் பின்பு இந்தவருடம் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதை அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யேர்மனியின் மத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து வில்லிச் (Willich) நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 27.8.2022 சனிக்கிழமை அன்று மிகச்சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு பின்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கும் மக்களுக்குமான அகவணக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தினை வீர வீராங்கணைகள் மைதானத்தைச் சுற்றிக் கொண்டுவந்து ஏற்றிவைத்து சத்தியப்பிரமாணமும் எடுத்துக் கொண்டார்கள். பின்பு அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இறுதியில் புள்ளிகளின் அடிப்படையில்.
முதலாமிடத்தை வூப்பெற்றால் (Wuppertal) தமிழாலயமும்
இரன்டாமிடத்தை மேபுஸ் (Meerbusch) தமிழாலயமும்
மூன்றாமிடத்தை முன்சன்கிளட்பாக் (Mönchengladbach) தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.



































































