பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­வ­ருக்கு சிறை

91 0

ஆணாக பிறந்து பெண்­ணாக மாறிய ஒருவர், ஆணாக இருந்த போது பல சிறுவர் சிறு­மி­யர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டில் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

இங்­கி­லாந்தைச் சேர்ந்த சாலி ஆன் டிக்ஸன் என்­பவர் பெண்­ணாக வாழ்­கிறார். ஆணாக பிறந்த இவர் 2014 ஆம் ஆண்டு பெண்­ணாக மாறி­யவர்.

26 முதல் 33 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இவர் ஆணாக இருந்த காலத்தில் சிறுவர் சிறு­மி­யர்கள் பலரை துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

5 சிறு­மி­க­ளையும் 2 சிறு­வர்­க­ளையும் சாலி டிக்ஸன் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தினார் என அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­தினர். 1989 முதல் 1996 வரை­யான காலத்தில் இக்­குற்றச் செயல்கள் இடம்­பெற்­ற­தா­கவும், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அப்­போது 6 முதல் 15 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளாக இருந்­தனர் எனவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

பாதிக்­கப்­பட்ட ஒருவர் 2019 ஆம் ஆண்டு இது தொடர்­பாக முறைப்­பாடு செய்­த­தை­யடுத்து சாலி ஆன் டிக்­ஸனின் குற்­றச்­செ­யல்கள் அம்­ப­ல­மா­கி­ய­தாக பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் சாலி ஆன் டிக்ஸனுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.