கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை தேடி வேட்டை

382 0

kilinochi_CIகிளி­நொச்சி, கோணாவில், யூனி­யன்­குளம் ஆகிய பகு­தி­களில் பாட­சா­லை­க­ளுக்குச் செல்­லாத 25 சிறார்கள் பிடிக்­கப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­விற்கு அமை­வாக ஒரு சிறு­வனை நன்­ன­டத்தை பாட­சா­லை­யிலும் ஆறு சிறு­வர்­களை சிறுவர் இல்­லத்­திலும் ஒரு சிறு­மியை பாது­காப்பு இல்­லத்­திலும் ஏனைய சிறு­வர்­களை அவர்­க­ளது பெற்­றோர்­க­ளிடம் கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்டும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

கிளி­நொச்சி, கோணாவில், யூனி­யன்­குளம், புது­மு­றிப்பு ஆகிய பகு­தி­களில் ெவள்ளியன்று மாவட்டச் செய­ல­கத்தின் சிறுவர் உத்­தி­யோ­கத்­தர்கள் சிறுவர் மேம்­பாட்டு உத்­தி­யோ­கத்­தர்கள், சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரிகள், கிராம அலு­வலர், பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்­கொண்ட விசேட நட­வ­டிக்­கையின் போது பாட­சா­லை­க­ளுக்குச் செல்­லாத மற்றும் பாட­சா­லை­களை விட்டு இடை­வி­ல­கிய 25 சிறார்கள் பிடிக்­கப்­பட்டு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்­றத்தால் நீதிவான் ஏ.ஏ.ஆனந்­த­ராஜா முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.

சிறு­வர்கள் பாட­சா­லை­க­ளுக்குச் செல்­லாது பல்­வேறு குற்­றச்­செ­யல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில் இவ்­வா­றான பாட­சாலை செல்­லாத சிறார்­களின் நலன்­களைக் கருத்­திற்­கொண்டு இவ்­வா­றான செயற்­பா­டுகள் கடந்த ஒரு வார கால­மாக மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் எழு­பத்தி ஐந்திற்கும் மேற்­பட்ட சிறார்கள் இவ்­வாறு பிடிக்­கப்­பட்டு கல்­வியில் இணைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக் ­கது.

இதேவேளை, கிளி­நொச்சி புது­மு­றிப் புப் பகு­தியில் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்து தகாத வார்த்தைப் பிர­யோகம் மேற்­கொண்­ட­வர்­களை உட­ன­டி­யாகக் கைது செய்து மன்றில் ஆஜர்­ப­டுத்­து­மாறு கிளி­நொச்சி மாவட்ட நீதவான் நீதி­மன்றம் உத்­த­ர­வி ட்­டுள்­ளது.

கிளி­நொச்சி புது­மு­றிப்பு கோணாவில் யூனி­யன்­குளம் ஆகிய பகு­தி­களில் பாட­சாலை செல்­லாத சிறு­வர்­களை மீள இணைக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரிகள் பொலிசார், சிறுவர் உரிமை மேம்­பாட்டு உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகி­யோ­ருக்கு இடை­யூறு விளை­வித்து அவர்­களை தகாத வார்த்­தைப்­பி­ர­யோகம் மேற்­கொண்ட பாட­சாலை செல்­லாத பிள்­ளையின் பெற்றோர் பாது­கா­வ­லர்கள் தொடர்­பாக நீதிவான் முன்னிலையில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை உடனடியாக கைது செய்து மன்றில் ஆயர்படுத்துமாறு பொலிசாருக்கு கிளநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .