பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணம்

500 0

சிங்­கப்­பூரில் நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது தெற்­கா­சிய புலம்­பெயர் வரு­டாந்த மாநாட்டில் கலந்­து­கொள்ளும் முக­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று சிங்­கப்பூர் பய­ண­மா­க­வுள்ளார்.
குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வில் உரை­யாற்­ற­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதன் பின்னர் அந்­நாட்டு ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் விசேட சந்­திப்­புக்­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் அவ­ரு­டைய பாரியார் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் பலரும் சிங்­கப்பூர் செல்­ல­வுள்­ளனர்.

சிங்­கப்பூர் அர­சாங்கம் விடுத்­துள்ள உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பின் பேரி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிங்­கப்பூர் செல்­ல­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

எதிர்­வரும் 18 மற்றும் 19 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது தெற்­கா­சிய வரு­டாந்த மாநாட்டில் கலந்­து­கொள்ளும் அதே­வேளை அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் முன்னாள் பிர­தம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க ஆகிய மூவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.