திருமலையில் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள்!

366 0

திரு­கோ­ண­மலை சாம்பல் தீவு சந்­தியில் வைக்­கப்­பட்ட புத்தர் சிலை தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நீண்­ட­கா­லத்­திற்­கு­ப் பின்னர் இந்த நாட்டில் சிறு­பான்மை மக்­களும் இணைந்து நாட்டின் வளர்ச்­சிக்கு பங்­க­ளித்­து­வரும் நிலையில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெ­று ­வது வேத­னை­யான விட­ய ­மாகும். என திரு­கோ­ண­மலை மாவட்­டப் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் க.துரை­ரெட்­ண­சிங்கம் தெரி­வித்தார்.

மேற்­படி விடயம் தொடர்­ பில்­ ஊ­ட­கங்­க­ளுக்கு அவர்­க­ருத்­து­ வெ­ளி­யி­டு­கை­யி லேயே இவ்­வாறு கூறினார்.அவர் மேலும் தெரி­விக்கையில், இவ்­வி­வகாரம் தொடர்பில் எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது குறித்த சில மக்­களில்­லாத
இடங்­களில் இவ்­வா­றான சிலை வைப்பு மற்றும் பௌத்த ஆலயம் அமைக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.நல்­லாட்சி அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கு இது­வ­ரை­யிலும் எவ்­வித நன்­மை­க­ளையும் செய்­ய­வில்லை.

எனினும், இப்­பௌத்த விகாரை அமைப்­பதில் அர­சாங்­கத்­திற்கு நேரடி தொடர்பு எதுவும் கிடை­யாது என நான் நம்­பு­கின்றேன்.. மாறாக இது ஒரு சிலரின் திட்­ட­மிட்ட செய­லா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. குறித்த இடத்தில் உள்ள பஸ்­த­ரிப்பு நிலயம் இரா­ணு­வத்­தினர் விடு­வித்தன் பின்னர் மக்கள் பயன் பாட்­டிற்­கு­துப்­ப­ரவு செய்­யப்­பட்ட நிலையில் கடந்த 10.07.2016 அன்று இந்த சிலை வைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த காலத்தில் திரு­கோ­ண­மலை பிர­தான பஸ்­நி­லை­யத்தில் இவ்­வா­றான சிலை ஒன்று வைக்­கப்­பட்­ட­தானால் எழுந்த நில­மையால் மாவட்­டத்தில் மக்கள் பல பிரச்­ச­னை­க­ளைச்­சந்­திக்க நேர்ந்­தது.

குறித்த காலத்தில் தற்­போ­தைய ஜனா­தி­பதி அமைச்­ச­ராக விருந்தார். அவரும் இன்னும் சிலரும் இங்கு வரு­கை­தந்து நில­மை­களை அவ­தா­னித்து சில நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தனர்.மட்­டு­மன்றி அந்த விடயம் நீதி­மன்றம் கொண்டு செல்­லப்­பட்­ட­தனால். குறித்த சிலை வழி­பாட்­டிற்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அது இன்றும் நட­மு­றையில் உள்­ளது.

இந்­நி­லையில் இவ் விவ­காரம் மீளவும் உரு­வா­கி­யுள்­ளது கடந்த குச்ச வெளிப்­பிர தேச அபி­வி­ருத்­திக்­கு­ழுவில் நடந்த கூட்­டத்தில் குச்ச வெளிப்­பி­ர­தே­சத்தில் 14 விகா­ரைகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இது புல்­மோட்டை அரி­சி­மலை மற்றும் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பல இடங்­களில் அமைப்­ப­தற்­காக ஒதுக்­கப்­பட்­டது. இவ்­வா­றுபௌ த்த மக்கள் இல்­லாத இடங்­களில் ஆல­யங்­களை அமைப்­பது நல்­லி­ணக்­கத்­திற்கு கு ந்தக­மான விட­ய­மாகும்.

பௌத்த மக்கள் உள்ள இடங்­களில் அமைப்­பது தேவை­யான ஒரு விட­யம்தான் அந்த மக்கள் வழி­பட அது வழி வகுக்கும் மாறாக பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் அமைப்பது ஏனைய மக்களின் மனங்களைப்புண்படுத்தும் விடயமாகும் இவ்வாறான விடயங்களை அரசு அனுமதிக்க கூடாது. இவை எந்த விதமான அங்கீகாரமுமின்றிச் செய்யப்படுகின்றன. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.