கடும் வரட்சி காரணமாக 7 லட்சம் பேர் பாதிப்பு

315 0

கடும் வரட்சி காரணமாக 7 லட்சத்து 9 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

திருகோணமலை, களுத்துறை, மொனராகலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய நீரின்மை காரணமாக விவசாயிகளுக்கு உரிய அறுவடையை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.