பிரான்ஸில் 84 பேரை பலி எடுத்தவன் இனங்காணப்பட்டான்

314 0

3649C34C00000578-3691019-image-a-77_1468539187106பிரான்ஸில் நேற்று இரவு லொறி மூலம் தாக்குதலை நடாத்தி 84 பேரை பலியெடுத்த பாதகன் பிரான்ஸின் பிரான்ஸ்-டியூனிசியன் இனத்தைச் சேர்ந்த மொஹமட் லாவோஹிஞ் புல்லா என்று அடையாளங் காணப்பட்டுள்ளான்.

பிரான்ஸின் பத்திரிகை ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சு இதனை உறுதிப்படுத்தப்படவி;ல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

31 வயதான குறித்த நபர் பல திருட்டு வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளி என பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் பாதுகாப்பு பிரிவுவும் இதனை இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவி;ல்லை.

இந்தத் தாக்குதலினால் 10 குழந்தைகள் உள்ளிட்ட 84 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.