மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்

277 0

பொகவந்தலாவ – கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, இன்று (14) அதிகாலை 02.00 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.