பிழைகளை திருத்தாது தேர்தல் நடத்துவது முறையற்றது

358 0

உள்ளுராட்சி சபைகளில் ஊழலுக்கு வழிவகுக்கும் பிழையான செயற்பாடுகளை சரிசெய்யாது தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாக பொதுமக்கள மீண்டும் ஒரு சேவையை எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அரசியலமைப்பை அடிப்படையாக கொள்ளாமல் பிழையை திருத்துவதற்கு ஆக்கபூர்வமான உபாயங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எல்லைநிர்ணய ஆணைக்குழு அறிக்கையை எதிர்வரும் தினங்களில் வர்த்தமானியில் பிரசுரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு தெரிவித்துள்ளது.