உ/தர பரீட்சை விண்ணப்பங்கள் கையேற்றல் நாளை நிறைவு

266 0

கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளையுடன் (15) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பிரத்தியேகமான முறையிலும் தமது விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியு,எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

நாளைய (15) தினத்திற்கு பின்னர் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.