மன்னாரில் விபத்து மூவர் மருத்துவமனையில்…

292 0
மன்னார்  நானாட்டான் பிரதான வீதியில்  நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார்  பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன், பின்னால் வந்த உந்துருளி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்தனர்.
 சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் விசாரனைகனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.