ஜனாதிபதி, பிரதமருக்குப் பதிலாக கைப்பாவைகள்!-சஜித்

245 0

மக்களால் நிராகரிக்கப்பட்ட நிதியமைச்சரும், ஜனாதிபதியும், பிரதமரும் வெளியேறிச் சென்ற போதிலும் இன்று அவர்களின் கைப்பாவை ஒருவரை ஜனாதிபதியாக்கி, மொட்டு அரசாங்கம் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டை அழித்து வருவதாகவும், மக்கள் துன்பங்களை அநுபவிக்கும் வேளையிலும், காக்கை அரசாங்கம் தமக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அமைச்சசுப் பதவிகளை வழங்குவதன் மூலம் பெரும் வரப்பிரசாதங்களை வழங்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (11) நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் தேர்தல் தொகுதி அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

தற்சமயம் வரை அமைச்சரவை அமைச்சர்கள் 20, இராஜாங்க அமைச்சர்கள் 37 மற்றும் 12 அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட 69 பேர் நியமிக்கப்படவுள்ளனர் எனவும், மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகளை வழங்கியவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

70-77 காலத்தில் சீனியில்லாமல் தேநீர் குடித்தது போலவும், மிளகாய் இல்லாமல் உணவுன்டது போலவும், அமையார் என்ன சொன்னாலும் செய்பவர்களும் இருந்தார்கள் போலவே, மொட்டு அரசாங்கத்தால் உரம் இல்லாமல் பயிரிடலாம் எனவும், அரிசி இல்லாமல் சோறு சாப்பிடலாம் என்றும், மின்சாரம் இன்றி மக்கள் பொறுமை காப்பார்கள் எனவும் இந்த அரசாங்கம் நினைக்கிறது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தின் விலையை 75 சதவீதம் உயர்த்தி, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளால் தாங்க முடியாத ஒரு நாட்டை உருவாக்கியது ஒரு சாம்பியன் எனவும், அதற்கு முன் நன்றாக இருந்த நாட்டிற்கு சாம்பியனொருவன், வீரனொருவன், ஹீரோவெருவன் வேண்டும் என மக்கள் நினைத்தாலும், அந்த வீரன்,ஹீரோ வந்தவுடனையே இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா மரணத்தை தகனம் மற்றும் அடக்கம் செய்வது பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் சரியான முடிவை வழங்கியிருந்த போது, இந்த ஹீரோ தன் கருத்துப்படி செயற்பட்டதாகவும், இதனால் தான் மக்கள் சபித்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

நாகராஜ கோலம் போட்டு பொய் கூறி நாட்டில் பீடனை ஏற்படாது என ஆடம்பரபட்டனர் எனவும்,அந்த சாபம் நாட்டையே பாதித்தது எனவும், இறுதியில் ஜனாதிபதிக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே,சாதாரண மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கோமாளித்தனங்களுக்கு இடமளிக்க முடியாது எனவும், எதிர்காலத்தில் பொது மக்களின் அரசாங்கத்தை அமைப்பதற்கு அணிதிரளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.