தமிழக அரசியல் நெருக்கடி – அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும்- நிதிஷ் குமார்

208 0

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம்

தமிழக முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம் காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார். அதே சமயம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக வேண்டி பதவி ஏற்க தீவிரம் காட்டி வருகிறார். இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இது அக்கட்சியின் உள் விவகாரம். அவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து விமர்சனம் செய்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த பிரச்சினைக்கு அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் இவ்வாறு அவர் கூறினார்.