மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைதள பக்கம் மர்ம நபர்கள் சிலரால் நேற்று காலை திடீரென்று முடக்கப்பட்டது.
உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிக்கைகளும், தகவல்களும் வெளியாகும் இணையதள பக்கம் முடக்கப்பட்டது தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
இணைதள பக்கம் முடக்கப்பட்டது குறித்து தேசிய தகவலியல் மையத்தின் கம்ப்யூட்டர் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மத்திய, மாநில அரசுகளின் 700 இணையதள பக்கங்கள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.