தற்போதைய டெண்டர் நடைமுறைக்கு அமைவாக நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு டெண்டர் முறையின் மூலம் நிலக்கரியை வழங்குவதற்கு இணங்கிய நிறுவனம் அதற்கு முன்வர தயங்குவதாக குறிப்பிட்டார்.

