கேப்பபிலவு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு

271 0

பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது  பதின்மூன்றாவது   நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 இவர்களுக்கு ஆதரவாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் பொது அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர் அணியினர் பொதுமக்கள் வர்த்தகர்கள் என பலரும் ஆதரவு வழங்கிவருகின்றனர்.