முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.