காற்பந்தாட்ட போட்டிக்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் 17 பேர் பலி

307 0

ஆப்பரிக்காவில் அமைந்துள் அங்கோல நாட்டில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டி இடைநடுவே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு அங்கோலாவில் உய்கே நகரில் 8 ஆயிரம் பேருக்கு போதுமான விளையாட்டு மைதானத்தில் அதிகளவு மக்கள் வந்துள்ள நிலையில் மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மைதானத்தில் ரசிகர்கள் நிறைந்த பின்னர் அங்கு செல்ல முடியாத சிலர் மைதனாத்தின் வாயிற்கதவை உடைத்து உட்செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட நெரிசலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 60 பேர் அளவில் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.