சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

105 0

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. இதை சிறப்பாக நடத்தி முடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக மக்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:- செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி. இது போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உங்கள் ஆதரவை கோருகிறேன். விருந்தோம்பலும், சுய மரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.