அட்டனில் சிறுத்தை புலி உயிரிழப்பு ; விசாரணை நடத்த விசேட குழு

143 0

சிறுத்தை புலியொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று அட்டனுக்கு சென்றுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

விலங்கின் உயிரிழப்புக்கு வனவிலங்கு அதிகாரிகளே காரணம் என்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்தது.