ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகளிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

121 0

இலங்கையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில்  இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிராக ஜனநாயகத்திற்கான இலங்கையர்கள் என்ற குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலமாதபோராட்டங்களின் பின்னர் மக்களிற்கு கிடைத்த மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணமானவர்கள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.