சீன தூதுவருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

140 0

இலங்கைக்கான சீன தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள  ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க  ஒரே சீனா கொள்கையை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

சீன தூதுவருடனான சந்திப்பின்போது ஒரேசீன கொள்கை மற்றும் நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிநாடுகளின் சாசனக்கோட்பாடுகளிற்கான இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை நான் வலியுறுத்தினேன். தற்போதைய உலகளாவிய பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்கவேண்டும்.

பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை ஆகிய அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதல் தவிர்ப்பிற்கு முக்கியமான அடித்தளங்களாகும் என ஜனாதிபதி தனது தெரிவித்துள்ளார்.