பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

296 0

யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி பிரதேசத்தில் பொலிஸார் பல்கலைகழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொலை செய்த வழக்கு விசாரனையின் சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்.பல்கலைகழகத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் மீது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்திருந்தனர்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு அவரகளுக்கு எதிரான வழக்கு விசாரனையானது யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையிலேயே இன்றைய தினமும் குறித்த வழக்கு விசாரனையானது யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்து.

இதனபோது குறித்ட ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.