மாற்றுப்பாலின சமூகத்தினருக்காக யாழ். பல்கலைக்கழகத்தில் பேரணி

189 0

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இன்று(25) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு மணியளவில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் ஊடாக சென்று விஞ்ஞான பீட நுழைவாயில் ஊடாக பல்கலைக்கழகத்திற்குள் சென்று நிறைவடைந்துள்ளது.

அத்துடன் மாற்றுப்பாலின சமூகத்தினர் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றுகையொன்றும் இடம்பெற்றுள்ளது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.